TN DSE Stat

Tamilnadu statistics 2018 Educational Districts - 63 Schools Details Schools (Govt, Matric, Aided) - 47198 Nursery Schools - 3216 ...

Showing posts with label Educational news. Show all posts
Showing posts with label Educational news. Show all posts

press release news

தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளிகளில் அதிக அளவில் சேர்ப்பு - கல்வித்துறை அதிகாரிகளுடன் தனியார் பள்ளி சங்கத்தினர் சந்திப்பு

 https://www.thanthitv.com/News/TamilNadu/2020/09/08182319/1677153/Private-schools-in-Tamil-Nadu.vpf?fbclid=IwAR2y4-1WgqB79Di6uRkE9hOsX792U3lAb2iHiIeDH7sKKtpUjYOuPFnUHzg

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொல்லையால் வேலையை உதறிவிட்டு ஆட்டோ ஓட்டி வரும் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்

https://www.maalaimalar.com/news/topnews/2020/09/07061335/1855417/Govt-doc-turns-autorickshaw-driver-blames-IAS-officers.vpf?fbclid=IwAR2y4-1WgqB79Di6uRkE9hOsX792U3lAb2iHiIeDH7sKKtpUjYOuPFnUHzg


https://trichyvision.com/trichy-government-school-with-503-students-in-three-days-from-the-beginning-of-admission/?fbclid=IwAR2y4-1WgqB79Di6uRkE9hOsX792U3lAb2iHiIeDH7sKKtpUjYOuPFnUHzg

சிபிஎஸ்இ டூ அரசுப்பள்ளி: 3 நாட்களில் 230 மாணவர்கள் சேர்க்கை- திருச்சி பீமநகர் நடுநிலைப் பள்ளி அசத்தல்

https://www.hindutamil.in/news/vetrikodi/news/571080-cbse-to-government-school-230-students-enrolled-in-3-days-trichy-bhimanagar-middle-school.html?fbclid=IwAR2y4-1WgqB79Di6uRkE9hOsX792U3lAb2iHiIeDH7sKKtpUjYOuPFnUHzg

மாயமாகும் மாணவியர்

தேர்வு முடிந்தவுடன் மாயமாகும் மாணவியர்:தமிழகத்தில் 15 நாளில் 200 பேர் ஓட்டம்:
தமிழகத்தில் பள்ளி பொது தேர்வுகள் முடிந்துள்ள நிலையில், ஓட்டம் பிடிக்கும், பள்ளி மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் ஒரே நாளில், சேலத்தில் நான்கு
மாணவியர் மாயமாகி உள்ளனர்.
பெற்றோர் டார்ச்சர்:தமிழகத்தில் பொதுத் தேர்வு முடிந்தநிலையில், பெற்றோரின் டார்ச்சர், மதிப்பெண் குறைவு ஏற்படும் என்ற அச்சம், காதலர்களுடன் ஓட்டம் பிடிப்பது என, மாணவியர் மாயமாவது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. நடப்பாண்டு பிளஸ் 2 தேர்வு, ஏப்., 1ம் தேதி முடிந்த நிலையில், ஏப்., 3ம் தேதி வரை, 150 பேர் மாயமாகி இருந்தனர். பத்தாம் வகுப்பு தேர்வு ஏப்.,13ம் தேதி முடிவடைந்தது. அதை தொடர்ந்து மாணவியர் மாயமாவது தொடர்கிறது. மாணவியர் மாயம் குறித்து, பெற்றோர் அளித்த புகார் படி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில், ஏப்.,1 துவங்கி, ஏப்., 15ம் தேதி மதியம் வரை, 200 மாணவியரும், 175 மாணவர்களும் மாயமாகி உள்ளனர். சேலம் மாநகரில் 17 மாணவியர் மாயமான நிலையில், 12 பேர் கண்டு பிடிக்கப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
காணவில்லை என, போலீஸ் ஸ்டேஷன்களில் பெற்றோர் அளித்த புகார்களின் படி, போலீசார், தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
பணியில் தீவிரம்:கடந்த ஆண்டு தேர்வு முடிந்த ஒரே வாரத்தில், 150 பேர் மாயமான போது ஐந்து நாளில், 100 பேரை போலீசார் கண்டுபிடித்தனர். நடப்பாண்டு போலீசார் தேர்தல் பணியில் தீவிரம் காட்டியும் மாணவியரை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக
குற்றச்சாட்டு எழுந்துள்ளது

schools drawbacks news

செங்குன்றம்: அரசு உயர்நிலை பள்ளிகளில் கணினி இருந்தும், அதற்கான பணியாளர்கள் நியமிக்கப்படாததால் பணிகள் பாதிப்படைந்து உள்ளன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும், திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், 300க்கும் அதிகமான அரசு உயர்நிலை பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றில், 150 பள்ளி களில் மட்டும்தான், தகவல் தொடர்பு வசதிக்காக கணினிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதன் மூலம், பள்ளி யின் வளர்ச்சி பணி, திட்ட பணி மற்றும் புகார்கள் குறித்து, உயர் அதிகாரிகள் உடனுக்குடன் அறியவும், உத்தரவுகளை தெரிவிக்கவும் முடியும். வருவாய் துறையுடன், பள்ளி கல்வி துறை இணைந்து, பள்ளி மாணவர்களுக்கான ஜாதி, வருவாய் சான்றிதழ்களையும் வழங்க முடியும். அரசு பொது தேர்வுக்கான அறிவிப்பு, அதற்குரிய மாணவ, மாணவியரின் வரிசை எண் பட்டியல் ஆகியவற்றையும் உடனடியாக தெரிவிக்க முடியும். ஆனால், மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும், கணினி வசதி செய்யப்படவில்லை. அந்த வசதி உள்ள பள்ளிகளில் கணினி பயிற்சி பெற்ற பணியாளர்கள் தற்போது பணியில் இல்லை. உதாரணமாக, காலை 10:00 மணி அளவில், குறிப்பிட்ட ஒரு பள்ளி யின் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை, வகுப்பறை, கழிப்பறைகள் எத்தனை என, கல்வி துறை அலுவலகத்தின் மூலம் விவரம் கேட்டு 'மெயில்' அனுப்பப்பட்டால், அதை குறித்த நேரத்தில் பார்த்து, பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு தெரிவிக்க உரிய பணியாளர் இருப்பதில்லை.

மற்ற பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் அல்லது கல்வித் துறை அலுவலகத்தினர், யாராவது தொலைபேசி, அலைபேசி மூலம், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு தகவல் தெரிவித்த பின்னரே, கணினியை இயக்க, 'தற்காலிக' ஆள் தேடப்படும் நிலை உள்ளது. அதே போன்று கல்வி துறை அலுவலகத்திற்கு உடனடியாக பதில் தெரிவித்து, 'மெயில்' அனுப்பவும் முடிவதில்லை. அதற்கு காரணம் அந்த கணினி தொடர்ந்து செயல்பாடின்றி முடங்கி கிடப்பதுதான். இதனால் பதில் கடிதம் தயாரித்து, 'நெட்' சென்டர்களுக்கு சென்று மெயில் அனுப்புகின்றனர். கிராமப்புற பள்ளிகளில் நிலைமை இன்னும் மோசம். அவர்கள், 'நெட்' சென்டருக்காக, பல கி.மீ., தூரம் பயணித்து நகர்ப்புறங்களுக்கு சென்று வர வேண்டும்.

இதுகுறித்து, அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: இன்றைய உலகில் தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் அரசு பள்ளிகளில் அதற்கான அடிப்படை பயிற்சி பெற்ற பணியாளர்கள் இல்லை. பெரும்பாலான பள்ளிகளில், ஆசிரியர்களே பற்றாக்குறைதான். அதனால், மாணவர்களை கட்டுப்படுத்தவும் முடியவில்லை. அவர்களை தேர்ச்சி அடைய செய்யவும் முடியவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

சென்னை: 'சென்னை மாநகராட்சி பள்ளிகள் அனைத்திலும், நான்கு மாதங்களில், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்' என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனு ஏன்? மணலி, சடையன்குப்பத்தில், மாநகராட்சி நடுநிலை பள்ளியின் கூரை இடிந்து விழுந்ததில், இரு மாணவர்கள் காயமடைந்தனர். கடந்த ஆண்டு, ஜனவரியில், சம்பவம் நடந்தது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இழப்பீடு வழங்கவும், அரசு பிறப்பித்த உத்தரவின்படி, அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் கட்டட வசதி, கழிப்பறை, குடிநீர், இருக்கை, முதல் உதவி என, அடிப்படை வசதிகளை அளிக்கவும், அதை கண்காணிக்க, நிரந்தர குழுவை அமைக்கவும் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், கார்த்திகேயன் என்பவர், மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த, 'முதல் பெஞ்ச்', பள்ளி கல்வி இணை இயக்குனர் ராஜேந்திரன் தலைமையில் குழுவை அமைத்து, சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் பள்ளிகளை ஆய்வு செய்து, அறிக்கை அளிக்கும்படி, உத்தரவிட்டது. அதன்படி, சென்னை மாநகராட்சி பள்ளிகளை ஆய்வு செய்து, பள்ளி கல்வி இணை இயக்குனர் ராஜேந்திரன், அறிக்கை தாக்கல் செய்தார்.

இதையடுத்து, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: சென்னை மாநகராட்சி நடத்தும், 281 பள்ளிகளில், 68 பள்ளிகள், அரசாணையில் கூறியுள்ள அனைத்து அம்சங்களையும் நிறைவேற்றி உள்ளது என்றும் மற்ற பள்ளிகளில் சுட்டி காட்டப்பட்டுள்ள குறைகள், நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

ஏப்ரலுக்குள்...: சுட்டி காட்டப்பட்டுள்ள குறைகளை நிவர்த்தி செய்ய, ஆறு மாத கால அவகாசம் வேண்டும் என, மாநகராட்சி வழக்கறிஞர் தெரிவித்தார். நான்கு மாதங்களுக்குள், குறைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்ய, சென்னை மாநகராட்சி அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். அப்போது தான், கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கும்போது, அனைத்து வசதிகளும், பள்ளிகளுக்கு கிடைத்திருக்கும்.

அறிக்கை அவசியம்: மாநகராட்சி மேற்கொள்ளும் நடவடிக்கைகளை, நீதிமன்றம் கண்காணிக்கும். நான்கு மாதங்கள் வரை காத்திருக்காமல், அவ்வப்போது மாநகராட்சி மேற்கொள்ளும் பணிகளை, நாங்கள் கவனிக்க ஏதுவாக, மாதாந்திர அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். எந்தெந்த பள்ளி களில், எந்த அளவுக்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை, குறிப்பிட வேண்டும். விசாரணை, மார்ச், 12ம் தேதிக்கு, தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு, 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டு உள்ளது.

court order

குடும்ப பிரச்னையால் அரசுப் பணிகளில் பதவி உயர்வை மறுக்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
குடும்ப பிரச்னையை காரணமாகக் கொண்டு அரசு ஊழியரின் பதவி உயர்வை மறுக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி, மின் பகிர்மானக் கழகத்தில் உதவி தணிக்கை அதிகாரியாக பணிபுரிபவர் ஏ.வேலுசாமி. அவருக்கு 2004-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இதன் பிறகு, அவருக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி வேலுசாமி திருச்சியில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆனால், அவரது மனைவி தனது கணவருடன் சேர்த்து வைக்குமாறு நீதிமன்றத்தைக் கோரினார். இதையடுத்து, விவாகரத்து வழக்கு நிலுவையில் இருந்தபோதே இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக வேலுசாமி மீது அவரது மனைவி புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி வேலுசாமியை பணியிடை நீக்கம் செய்து மின்வாரியம் உத்தரவிட்டது. பிறகு, 2012-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ஆம் தேதி அந்த பணியிடை நீக்கத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பணியில் அமர்த்தியது.
ஆனால், 2014-15-ஆம் ஆண்டு பதவி உயர்வுப் பட்டியலில் வேலுசாமி பெயர் இடம்பெறவில்லை. மேலும், மீண்டும் பணியில் சேர்ந்தது முதல் ஊக்க ஊதியமும் வழங்கவில்லை.
இது குறித்து மின் உற்பத்தி, மின் பகிர்மானக் கழகத்தில் மனு அளித்துள்ளார். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தனது பெயரை பதவி உயர்வு பட்டியலில் சேர்க்கவும், ஊக்க ஊதியம் வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் உயர் நீதிமன்றத்தில் வேலுசாமி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன்பு நடந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்னை இருந்துள்ளது. அதைக் காரணமாக்கி மனுதாரரின் பதவி உயர்வுக்கு தடை விதிக்க முடியாது.
இருதார மணம் செய்துள்ளார் என்ற புகாரை மனுதாரருக்கு எதிராகக் கொண்டுவர முடியாது. இவருக்கும் மனைவிக்கும் இடையேயான குடும்பத் தகராறை முகாந்திரமாகக் கொண்டு பதவி உயர்வை மறுக்க முடியாது. மனுதாரர் மீண்டும் பணியில் சேர்ந்தவுடன் ஊக்க ஊதியம் பெற உரிமை உண்டு. ஆனால், ஏன் ஊக்க ஊதியம் வழங்கவில்லை என்பதற்கு எந்தக் காரணமும் தெரிவிக்கப்படவில்லை. தண்டனை அளித்திருந்தால் மட்டுமே மறுக்க முடியும்.
எனவே, மனுதாரருக்கு 8 வாரங்களுக்குள் ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். மேலும், அவரது பதவி உயர்வு குறித்த மனுவைப் பரிசீலிக்க வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

email problems

தனியார் இ-மெயில் சேவைகளை பயன்படுத்த வேண்டாம்: அரசுத் துறைகளுக்கு அறிவுறுத்தல்
தனியார் இ-மெயில் சேவைகளை அலுவலகப் பணிகளுக்கு உபயோகப்படுத்த வேண்டாம் என்று அரசுத் துறைகள், அமைச்சர்களை மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பிரபலமான சில தனியார் இ-மெயில் சேவைகளில் பகிரப்படும் முக்கியத் தகவல்கள், ரகசியங்கள் வெளியே கசிய வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய, மாநில அரசுத் துறை அலுவலகங்கள், அமைச்சர்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் அண்மையில் சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம்: உள்நாட்டு நிறுவனங்களின் இ-மெயில் சேவைகளையோ, தேசிய தகவல் மையம் சார்பில் உருவாக்கப்பட்ட இ-மெயில் சேவைகளையோ பயன்படுத்தும்போது, அதில் பகிரப்படும் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்.
மேலும் சில முக்கியத் தகவல்கள் அழிந்துவிட்டாலும் கூட உள்நாட்டு சேவையில் அதை மீட்டெடுக்க முடியும். ஆனால் வெளிநாட்டு நிறுவனங்களின் இ-மெயில் சேவையில் பகிரப்படும் முக்கியத் தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளது.
அவை நமது கட்டுப்பாட்டில் இல்லை. எனவே அலுவலகப் பயன்பாடுகளுக்கு உள்நாட்டுச் சேவைகள் அல்லது தேசிய தகவல் மையம் சார்பில் உருவாக்கப்பட்ட இ-மெயில் சேவைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Posts Plugin for WordPress, Blogger...

knowledge links

Videos