05.06.2025 அன்று உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு ஆசிரியர்கள் / மாணவர்கள் / பொதுமக்கள்
ஆகியோர்ளுக்கு அனைத்துவகை பள்ளிகள் சார்பில் சுற்றுச்சூழல் மற்றும்
மனித வளத்தினை பாதுகாக்கும் வகையில் பேரணி
நடத்துதல், மரக்கன்றுகள் நடுதல், பள்ளி / அலுவலகவளாகத்தினை
தூய்மை பராமரித்தல் (மக்கும், மக்காத
குப்பைகளுக்கான தொட்டிகள் வைத்தல்) போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு
ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது,
எனவே https://ecoclubs.education.gov.in/
என்ற இணையத்தில்
இதுவரை பதிவு செய்யாத பள்ளிகள் உடன்பதிவு செய்து,
அதன் பின் சுற்றுச்சூழல் செயல்பாடுகள் சார்ந்து எடுக்கப்பட்ட புவிசார் குறியிடப்பட்ட புகைப்படத்தினை (Geotagging) Eco clubs for mission life portal
பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் ஒவ்வொருநாளும் காலை வழிபாட்டுக்கூட்டம் , மன்றசெயல்பாடுகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில்
சுற்றுச்சூழல் சார்ந்த உறுதிமொழி எடுத்தல் மற்றும் பிற செயல்பாடுகள் செயல்படுத்த ஆசிரியர்
ஒருங்கிணைப்பாளர்களுக்கு உரிய வழியில் அறிவுரை வழங்கி எவ்வித தொய்வுமின்றி செயல்படுத்த
நடவடிக்கை மேற்கொள்ளுமாறு
அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு
தங்கள் பள்ளியில் உள்ள மரங்கள்
குறித்த தகவல்களை எவ்வாறு QR Code செய்வது
குறித்த காணொளி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.